இசையுடன் நான்.....

இசையுடன் நான்.....

Monday, April 23, 2012

இளையராஜா குறித்து சில தகவல் துளிகள்!







* இளையராஜாவின் பிறந்த நாளும், கலைஞர் பிறந்த நாளும் ஜூன் 3. இப்போது இசைக்கு வயது 67. வீட்டில்தான் அவரது பிறந்த நாளைக் கொண்டாடுவார்கள். அவருக்கோ, அன்றும் மற்றுமொரு நாளே!

* திருவண்ணாமலைக்கான பயணங்களின் ரச...ிகர்... வழியே வயலோரச் சிறுவர்களைப் படம் எடுப்பார். அவர்களின் முகவரி கேட்டு, அவர்களுக்கே படங்களை அனுப்பி ஆனந்த அதிர்ச்சியும் தருவார்!

* மூகாம்பிகை கோயிலுக்குப் போய் வந்த பிறகு, அசைவ உணவையும் ஆபரணங்கள் அணிவதையும் நிறுத்திவிட்டார். கழுத்தில் இரண்டு ருத்திராட்ச மாலைகள் உரிமையாகப் புரண்டுகிடக்கும்!

* ராஜாவின் எளிய உணவு காலையில் இரண்டு இட்லி, மாதுளம்பழம் ஜூஸ், மதியம் கொஞ்சம் சாதம், பழம். இரவு இரண்டு சப்பாத்தி. காரம், உப்பு கிடையவே கிடையாது. சைவ ராஜா!

* குளிர் உறையும் வெளிநாடுகளுக்குப் போனாலும் அதே தும்பைப்பூ வேட்டி, ஜிப்பாதான். துபாயின் பிரபல ஹோட்டலில் வேட்டி அணிந்து உள்ளே நுழையத் தடை இருந்தது. அந்தத் தடையைத் தகர்த்துத் தங்கிய ஒரே மனிதர் இவரே!

* நவராத்திரிகள்தான் ராஜா வீட்டு ஸ்பெஷல். மிகச் சிறந்த சங்கீத, இசைக் கலைஞர்களைத் தன் வீட்டுக்கு வரவழைத்து, கச்சேரிகள் நடத்தி ரசிப்பார். நவராத்திரியில் இளையராஜாவின் வீடு இசையால் நிரம்பி வழியும்!