யார் என்ன சொன்னா லும் என்னவாகும்
இளையராஜா இசைக்கெனவே பிறந்த ராஜா
ஊர் தோறும் அவர் இசையை உணர்ந்து போற்ற
உணராதார் உளறி நின்றால் விட்டுத் தள்ளும்
சீர் கொண்ட செந்தமிழாள் பெருமை கொண்டாள்
சிறப்பான இசை வேந்தைப் பெற்றதாலே
பார் உணர்ந்து நிற்கிறது அவர் இசையை
பாடி நிற்போம் அவர் புகழை இறையும் வாழ்த்த
- நெல்லை கண்ணன்