இசையுடன் நான்.....

இசையுடன் நான்.....

Tuesday, August 10, 2010

இறையும் வாழ்த்த (இளையராஜா)

யார் என்ன சொன்னா லும் என்னவாகும்
இளையராஜா இசைக்கெனவே பிறந்த ராஜா
ஊர் தோறும் அவர் இசையை உணர்ந்து போற்ற
உணராதார் உளறி நின்றால் விட்டுத் தள்ளும்
சீர் கொண்ட செந்தமிழாள் பெருமை கொண்டாள்
சிறப்பான இசை வேந்தைப் பெற்றதாலே
பார் உணர்ந்து நிற்கிறது அவர் இசையை
பாடி நிற்போம் அவர் புகழை இறையும் வாழ்த்த

- நெல்லை கண்ணன்

இளையராஜா என்றே

பின்னணி இசை யதுவோ படம்
பேசா இடங்களில் வசனங்கள் பேசிடும்
மெல்லிசைப் பாட லதோ நம்
மேனி முழுவதும் துளிர்த் திட வைத்திடும்
துள்ளிசைப் பாட லென்றால் விண்ணைத்
தொட்டிடும் அளவிற்குத் துள்ள வைக்கும்
எம்மிசை என் றாலே அது
இளைய ராஜா என்றே மலர்ந்து நிற்கும்

- நெல்லை கண்ணன்