இசையுடன் நான்.....

இசையுடன் நான்.....

Monday, April 23, 2012

இளையராஜா இசைமைத்த ஒரு படம்...!

இளையராஜா இசைமைத்த ஒரு படம். பாட்டுக்கு மெட்டுப் போட்டாயிற்று. சித்ராவிற்கும் பாடிக் காட்டியாயிற்று. வாத்தியக்காரர்களை ஒருங்கிணைத்து எப்படியான இசைக் கோர்வை பாட்டில் வரவேண்டும் என்று இளையராஜா எதிர்பார்த்ததையும் வாத்தியக்காரர்களுக்குச் சொல்லியாயிற்று. சரி, இனிப் பாடல் ஒலிப்பதிவுக்கு முன் ஒத்திகை ஆரம்பமாயிற்று.

குறித்த பாடலின் இடையில் வரும் ஆர்மோனிய வாத்திய வாசிப்பை ஆர்மோனியக்காரர் வாசிக்கின்றார். ஆன...ால் ராஜா மனதில் எதிர்பார்த்தது ஏனோ அதில் மிஸ்ஸிங். மீண்டும் மீண்டும் இளையராஜா, குறித்த வாத்தியக்காரரை அந்த இசையை வாசிக்கச் சொல்லிக் கேட்கின்றார். ம்ஹீம், ராஜா எதிர்பார்த்த அந்தச் சங்கதி வரவேயில்லை.
இளையராஜா ஆர்மோனியத்தை வாங்கிக் கொள்கின்றார். நேராக ஒலிப்பதிவு ஆரம்பம். சித்ரா பாடுகின்றார். மற்றைய வாத்தியங்கள் சங்கமிக்க, இளையராஜாவே நேரடியாக ஆர்மோனியத்தை வாசிக்க, அவர் எதிர்பார்த்த அந்தச் சங்கதியே ராஜாவின் வாசிப்பில் பாடலாக ஒலிப்பதிவு செய்யப்படுகின்றது. இந்தப் பாட்டினை அணு அணுவாக ரசிப்பவர்களுக்கு உண்மையில் ராஜா வேண்டிக் கேட்ட அந்த அற்புத ஆர்மோனிய வாசிப்பின் தாற்பர்யம் புரியும். வளைந்து நெளிந்து குழைந்து என்னமாய் பிரவாகிக்கின்றது இந்த இசை.

கீதாஞ்சலி என்று தெலுங்கிலும் இதயத்தைத் திருடாதே என்று தமிழிலும் வந்த படத்தில் "ஜல்லந்த" என்று தெலுங்கு பாடி தமிழில் "ஆத்தாடி அம்மாடி தேன்மொட்டு தான்" என்றும் வந்த பாட்டு.

இளையராஜா குறித்து சில தகவல் துளிகள்!







* இளையராஜாவின் பிறந்த நாளும், கலைஞர் பிறந்த நாளும் ஜூன் 3. இப்போது இசைக்கு வயது 67. வீட்டில்தான் அவரது பிறந்த நாளைக் கொண்டாடுவார்கள். அவருக்கோ, அன்றும் மற்றுமொரு நாளே!

* திருவண்ணாமலைக்கான பயணங்களின் ரச...ிகர்... வழியே வயலோரச் சிறுவர்களைப் படம் எடுப்பார். அவர்களின் முகவரி கேட்டு, அவர்களுக்கே படங்களை அனுப்பி ஆனந்த அதிர்ச்சியும் தருவார்!

* மூகாம்பிகை கோயிலுக்குப் போய் வந்த பிறகு, அசைவ உணவையும் ஆபரணங்கள் அணிவதையும் நிறுத்திவிட்டார். கழுத்தில் இரண்டு ருத்திராட்ச மாலைகள் உரிமையாகப் புரண்டுகிடக்கும்!

* ராஜாவின் எளிய உணவு காலையில் இரண்டு இட்லி, மாதுளம்பழம் ஜூஸ், மதியம் கொஞ்சம் சாதம், பழம். இரவு இரண்டு சப்பாத்தி. காரம், உப்பு கிடையவே கிடையாது. சைவ ராஜா!

* குளிர் உறையும் வெளிநாடுகளுக்குப் போனாலும் அதே தும்பைப்பூ வேட்டி, ஜிப்பாதான். துபாயின் பிரபல ஹோட்டலில் வேட்டி அணிந்து உள்ளே நுழையத் தடை இருந்தது. அந்தத் தடையைத் தகர்த்துத் தங்கிய ஒரே மனிதர் இவரே!

* நவராத்திரிகள்தான் ராஜா வீட்டு ஸ்பெஷல். மிகச் சிறந்த சங்கீத, இசைக் கலைஞர்களைத் தன் வீட்டுக்கு வரவழைத்து, கச்சேரிகள் நடத்தி ரசிப்பார். நவராத்திரியில் இளையராஜாவின் வீடு இசையால் நிரம்பி வழியும்!